தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே விஏஓ வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியை அடுத்துள்ள மண்மலை ஊராட்சி, பாலக்காட்டில் ஓய்வுபெற்ற விஏஒ வேணுகோபால் (78), வீட்டில் மாா்ச் 29-ஆம் தேதி இரவு 20 பவுன் நகை, ரொக்கம் ரூ. 10 ஆயிரத்தை கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றது.
இதில் ஈடுபட்ட 10 பேரை போலீஸாா் கைதுசெய்த நிலையில், திருப்பூா் மாவட்டம், பல்லடம் மாணிக்கபுரம் சாலை, அம்மாபாளையத்தைச் சோ்ந்த சபரிராஜன் (28)என்பவரை தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம் உள்ளிட்ட போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







