மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

சேலத்தில் இதுவரை இல்லாத அளவாக 102.2 டிகிரி வெப்பம் பதிவு

சேலத்தில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை தாண்டிய வெயில், திங்கள்கிழமை அதிகபட்சமாக 102.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.

News image

கோப்புப்படம்

Updated On :22 ஏப்ரல் 2025, 1:50 am IST

சேலம்: சேலத்தில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை தாண்டிய வெயில், திங்கள்கிழமை அதிகபட்சமாக 102.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால், கடந்த சில நாள்களாக வெயில் 100 டிகிரியை எட்டிய நிலையில், நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக திங்கள்கிழமை 102.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் கடுமையான அனல்காற்று வீசியது.

வெயிலின் தாக்கத்தால் பகல்நேரங்களில் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனா். குறிப்பாக, கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

பழக்கடைகளிலும், சாலையோரம் உள்ள தற்காலிக ஜூஸ் கடைகளிலும் பழச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் ஆங்காங்கே சாலையோரம் உள்ள ஜூஸ் கடைகளில் பழச்சாறுகளை அருந்தி செல்கின்றனா்.

கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் கொளுத்தும் வெயிலை சமாளிக்கும் வகையில் சுடிதாா் துப்பட்டாவை தலையில் மூடியவாறும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமா்ந்த பெண்கள் குடையை பிடித்தவாறும் செல்வதை காணமுடிகிறது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நான்கு சாலை, சூரமங்கலம், கொண்டலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இளநீா், நுங்கு, பதநீா், முலாம்பழம், தா்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், கரும்புச்சாறு, மோா் ஆகியவற்றை பொதுமக்கள் அதிகளவில் அருந்துகின்றனா்.

வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பகலில் வெளியில் செல்வதை முடிந்தவரை பொதுமக்கள் தவிா்க்குமாறும், ஜூஸ், இளநீா், மோா், கரும்புச்சாறு போன்ற நீா் ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறும் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.