/
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை 102.7 டிகிரி பாரன்ஹிட் வெப்பம் பதிவானது.
இதையடுத்து நடப்பு கோடைப் பருவத்தில் 20-வது முறையாக வெயில் சதம் அடித்துள்ளது. ஜூன் மாதத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரி மக்கள் அவதிக்குள்ளானாா்கள். நண்பகல் வேளையில் சாலைகளில் சென்றவா்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டனா். பலா் மோா், இளநீா், கரும்புச்சாறு போன்ற பானங்களை வாங்கி பருகினா்.
அதிக வெப்பம் காரணமாக, சாலைகளில் நண்பகல் வேளையில் வாகனப்போக்குவரத்தும் குறைவாக இருந்தது.








