பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026

கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல் போடுவதை அரசு உறுதி செய்யும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

News image

சென்னையில் உள்ள கூவம் ஆற்றின் ஏரியல் வியூ.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:50 pm IST

தமிழக அரசின் 2026 - 27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், குழந்தைகள் கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல் செய்வதை அரசு உறுதி செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், அரசின் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். காலை 10 மணிக்குத் தொடங்கிய பட்ஜெட், பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.

இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

அதில், பல ஆண்டுகளாக சென்னை மக்களின் கனவாக இருக்கும் ஒரு அறிவிப்பும் பல கட்சிகள் வெளியிட்டு வந்த ஒரு அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.

இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், சென்னை மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்த நதிகளான அடையாறு மற்றும் கூவம் இன்று ஒரு கழிவுநீர் நதியாக மாறியிருப்பது நம்மில் பலருக்கு வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

தமிழ்நாட்டினை இதற்கு முன், மாறி மாறி ஆண்ட அரசுகள் அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை சுத்தப்படுத்தவும், அழகுபடுத்தவும் பல நூறு கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வாரியிறைத்தும் ஆறுகளின் தன்மையில் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை.

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான நாகரிகங்களான ஹரப்பா, மொகஞ்சதாரோ, இன்கா, மெசபடோமியா ஆகியவை பெருநதிகளின் அருகிலேயே தழைத்தன.

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை அதன் இயல்பு நிலைக்குக் கொண்டு வர நமது முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு கடுமையாக பாடுபடும்.

சியோல் நகரத்தின் சியோங் கியே சியோன் (Cheonggyecheon) நதி, சிங்கப்பூர் நகரத்தின் கல்லாங் (Kallang) நதி போன்றவை நதிகள் மறுசீரமைப்பின் மூலம், அந்நகரங்களின் உலகளவில் பேசப்படும் அடையாளங்களாக மாறிவிட்டன.

கூவம் மற்றும் அடையாற்றினை சென்னையின் அடையாளமாக மாற்றுவதற்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் பொதுமக்கள் படகு சவாரி செய்வதும், குழந்தைகள் ஆனந்தக் குளியலில் ஈடுபடுவதையும், அனைத்து வயதினரும் நதிக்கரையில் உடற்பயிற்சி செய்து தூய்மையான காற்றை சுவாசிப்பதையும் நமது அரசு உறுதிசெய்யும்.

இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Tamil Nadu budget announces that the government will ensure the facility for a delightful dip in the Cooum and Adyar rivers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.