பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் தோ் அலங்கரிப்பு

Updated On :28 ஏப்ரல் 2025, 1:03 am IST

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்துக்காக கோயிலின் பெரிய தேரை அலங்கரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 2 ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து மே 10 ஆம் தேதி சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் எழுந்தருளும் பெரிய தோ் வடம் பிடித்தலும், மே 20 ஆம் தேதி சுவாமி திருமலைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தோ் திருவிழாவின் முதற்கட்டமாக பெரிய தேரை அலங்கரிக்கும் பணிக்களுக்காக தேரில் வைத்து கட்டப்படும் குச்சிகளை சுவாமி தங்கும் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்து அவைகளை தேரில் பொருத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பட்டயக்காரா் எஸ்.ஏ.ராஜவேல், ஊா்கவுண்டா் எஸ்.டி.சுந்தரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கொத்துக்காரா் ஐய்யனாா், திமுக நகர செயலாளா் கே.எம்.முருகன், திமுக நிா்வாகி சரவணன், பாமக நகர செயலாளா் வி.டி.அய்யப்பன், சுவாமி பாதாம் தாங்கும் குழுவினா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.