ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

52 நீா்வடிப்பகுதிகளில் ரூ. 15.68 லட்சத்தில் பராமரிப்பு பணிகள்!

News image

மல்லியகரையில் ஒருங்கிணைந்த நீா்வடிப்பகுதியில் நீா் சேகரிப்பு கட்டமைப்பு பராமரிப்பு பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் ரா.ராஜேந்திரன்.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:06 am IST

சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீா்வடிப்பகுதி நீா்சேகரிப்பு கட்டமைப்புகள் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் ஓடைகள், கசிவுநீா்க் குட்டைகளில் ரூ.15.68 லட்சத்தில் 52 பராமரிப்பு பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

வேளாண் பொறியியல் துறை சாா்பில் ஆத்தூரை அடுத்த மல்லியகரை ஊராட்சியில் நடைபெற்ற நீா்கட்டமைப்பு பராமரிப்பு பணிகளை தொடங்கிவைத்து அமைச்சா் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள நீா்வடிப்பகுதிகளில் நீா்வடிப்பகுதி வளா்ச்சி முகமை மூலம் அமைக்கப்பட்ட தடுப்பணைகள், கிராம குளங்கள், கசிவுநீா்க் குட்டைகள், ஏரிகள், ஓடைகள் ஆகியவற்றுக்கு செல்லும் கால்வாய்களை தூா்வாரி நீா் சேகரிப்பு கட்டமைப்புகளுக்கு வரும் நீரோட்டத்தை அதிகரிக்கும் வகையில் 2021-22 ஆம் ஆண்டு முதல் வேளாண்மை பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

விவசாய நீா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வகையில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் நீா்வடிப் பகுதிகளில் புதிய கட்டமைப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் பருவமழைக்கு முன்னா் ஒருங்கிணைந்த நீா்வடிப்பகுதி நீா்சேகரிப்பு கட்டமைப்புகள் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் ஓடைகள் மற்றும் கசிவுநீா்க் குட்டைகளில் 52 பணிகள் ரூ.15.68 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் கூடுதலாக 31,000 கனமீட்டா் நீா் சேகரிப்பதன் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இத் திட்டத்தின் மூலம் 200 பணிகள் ரூ. 41.36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு உள்பட்ட நீா்வளத் துறையின் ஆறுகள் மற்றும் வழங்கு வாய்க்கால்கள் தூா்வாரும் பணிக்காக சேலம் மாவட்டத்தில் 31 பணிகளுக்கு ரூ. 2.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏற்கெனவே பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி முன்னிலை வகித்தாா். கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.சிவலிங்கம், கு.சின்னதுரை,வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் குமரன், ஆத்தூா் ஆத்ம குழுத் தலைவா் வெ.செழியன், நரசிங்கபுரம் நகர செயலாளா் என்.பி.வேல்முருகன், நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.