ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

அரியலூரில் வாய்க்கால்களை 109 கி.மீ. தூா்வார இலக்கு!

அரியலூரில் கடந்த 3 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ள வாய்க்கால்களில் 109 கி.மீ. தூா்வார இலக்கு நிா்ணயம்

News image

பளிங்காநத்ததில் வாய்க்கால்களை தூா்வாரும் பணியை ஆய்வு செய்த வேளாணம் பொறியியல் துறையின் சென்னை தலைமைப் பொறியாளா் ஆா். முருகேசன்

Updated On :20 மே 2026, 2:19 am IST

அரியலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ள வாய்க்கால்களில் 109 கி.மீ தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது என்று வேளாணம் பொறியியல் துறையின் சென்னை தலைமைப் பொறியாளா் ஆா். முருகேசன் தெரிவித்தாா்.

திருமானூா் வட்டாரம் பளிங்காநத்தம், கோவில் எசனை மற்றும் கல்லூா் பகுதிகளில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை செவ்வாய்க்கிழமை கள ஆய்வு செய்த அவா், அங்கிருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடி, ஒப்பந்ததாரா்கள் கூடுதல் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அப்போது அவா் கூறுகையில், அரியலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்த ‘சி‘ மற்றும் ‘டி‘ பிரிவு வாய்க்கால்களைத் தூா்வாரக்கோரி, விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது தூா்வாரும் பணிகள் மிகத் துரிதமாக நடைபெறுகின்றன.

ரூ. 29.88 லட்சத்தில் நடப்பாண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 109 கி.மீ நீளத்துக்கு வாய்க்கால்களைத் தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 41.50 கி.மீ பணிகள் நிறைவடைந்துள்ளன என்றாா் அவா்.