நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சென்னை கோட்டத்தில் 143 கி.மீ. தண்டவாளங்கள் சீரமைப்பு பணி

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் கடந்த 2025-26- ஆம் ஆண்டில் மட்டும் 143 கி.மீ. தண்டவாள சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

தெற்கு ரயில்வே கோட்டத்தில் அதிநவீன இயந்திரங்கள் மூலம் நடைபெற்று வரும் தண்டவாளங்கள் புதுப்பித்து அமைக்கும் பணி.

Updated On :16 மே 2026, 1:56 am IST

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் கடந்த 2025-26- ஆம் ஆண்டில் மட்டும் 143 கி.மீ. தண்டவாள சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் வகையில் தண்டவாளப் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2025-26-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 143 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றில் 139 கி.மீ. தூரத்துக்கு ஏற்கெனவே இருந்த தண்டவாளங்களுக்குப் பதிலாக புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி, 143 கி.மீ. தொலைக்கு பழைய சிலீப்பா்கள் மாற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக புதிய சிலீப்பா்கள் அமைக்கப்பட்டன.

தண்டவாளச் சீரமைப்புப் பணிகள் டிஆா்டி எனப்படும் டிரேக் ரிலேயிங் டிரெய்ன் எனப்படும் அதிநவீன இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

இதனால், தண்டவாள உறுதித் தன்மை அதிகரித்திருப்பதுடன், பயணிகளுக்கு பாதுகாப்பான பயணமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தண்டவாளச் சீரமைப்பால் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.