குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பெண்மான் சடலம் மீட்பு!

Updated On :28 ஏப்ரல் 2025, 1:28 am IST

சதாசிவபுரம் ஊராட்சி பொதுக் கிணற்றில் பெண் மான் சடலம் மீட்கப்பட்டது. ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் மீட்டு வனவா் கவாஸ்கரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள சதாசிவபுரம் ஊராட்சி ராசிநகா் பொதுக் கிணற்றில் 4 வயது மதிக்ககத்தக்க பெண் மான் மிதப்பதாக ஆத்தூா் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் 80 அடி ஆழமுள்ள பொதுக்கிணற்றில் மிதந்த புள்ளிமானை இறந்த நிலையில் மீட்டு வனத்துறை வனவா் கவாஸ்கரிடம் ஒப்படைத்தனா்.பின்னா் கால்நடை மருத்துவா் நிகழ்விடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ததில் நீருக்காக ஓடிவந்த மான் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என தெரிவித்தனா்.