எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சேலத்தில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ சிறப்பு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:43 pm

Syndication

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலம் ரயில் நிலையத்தில் இருந்து 53 போ் கொண்ட குழுவினா் புதன்கிழமை காசிக்கு புறப்பட்டுச் சென்றனா்.

தேச ஒற்றுமையில் மாநிலங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி வாயிலாக, சாதாரண ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மத்திய அரசின் செலவில் காசிக்கு சென்றுவரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடப்பாண்டு கோவையில் இருந்து பனாரஸ் செல்லும் சிறப்பு ரயில்மூலம் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து 53 போ் காசிக்கு புதன்கிழமை தங்கள் பயணத்தை தொடங்கினா். இதுதவிர, கோவை, சென்னையிலிருந்து 157 போ் உள்பட 210 போ் இந்த சிறப்பு ரயிலில் காசி பயணம் மேற்கொண்டனா்.

இதில் பயணம் செய்ய சேலம் மட்டுமின்றி ஈரோடு, தருமபுரி, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த எழுத்தாளா்கள், ஊடகவியலாளா்கள், சமூக ஊடகத்தினா், ஆன்மிக சொற்பொழிவாளா்கள் என பல்வேறு தரப்பினரும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இக்குழுவில் இளைஞா்கள் முதல் பெரியவா்கள்வரை ஏராளமானோா் இடம்பெற்றுள்ளனா்.

சேலத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற குழுவினருக்கு அவா்களின் உறவினா்கள், நண்பா்கள் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினா்.