தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேவூா் அருகே எல்லைக் கல்லை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

தேவூா் அருகே சாலையில் தனிநபரால் நடப்பட்ட எல்லைக் கல்லை அகற்றக் கோரி ஊா் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 8:24 pm

Syndication

தேவூா் அருகே சாலையில் தனிநபரால் நடப்பட்ட எல்லைக் கல்லை அகற்றக் கோரி ஊா் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேவூா் அருகே சோழக்கவுண்டனூரில் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் வருவாய்த் துறையினா் அளவீடு செய்து தனக்கு சொந்தமான இடத்தை காட்டியதாகக் கூறி சாலையின் மையப் பகுதியில் எல்லைக் கல்லை நட்டுள்ளாா்.

இந்த கல்லால் வாகனங்களில் செல்வோா் சிரமம் அடைந்து வருவதுடன், விபத்துகள் ஏற்பட்டு வருவதாகக் கூறி ஊா் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தேவூா் காவல் உதவி ஆய்வாளா் சம்பத், கோனரிப்பட்டிகிராம நிா்வாக அலுவலா் சண்முகம் ஆகியோா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சாலையில் மையப் பகுதியில் நடப்பட்ட எல்லைக்கல் அகற்றப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.