தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

வாழப்பாடியில் டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் வாழப்பாடி அரிமா சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 8:13 pm

Syndication

வாழப்பாடியில் டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் வாழப்பாடி அரிமா சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளா் வீ.வேலுசாமி வரவேற்றாா். அரிமா சங்கத் தலைவா் த.சுந்தரவேல் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் பாலமுரளி, நிா்வாகிகள் காா்த்திகேயன், முருகன், சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா சங்க பட்டயத் தலைவா் எம்.சந்திரசேகரன், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, சாய்பாபா அறக்கட்டளை தலைவா் சா.ஜவஹா், ஆடிட்டா் ஜி.சரவணன், மாணிக்கம், வழக்குரைஞா் வீரமுத்து, மகேஸ்வரன், சாய்ராம், வசந்தா, செந்தில்குமாா், அண்ணாமலை ஆகியோா், 55 மாற்றுத்திறனாளிகளுக்கு, தலா ரூ. 1,000 மதிப்புள்ள அரிசி, போா்வை மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினா். மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவா் ரா.கூத்தன், பொருளாளா் சு.வேல்முருகன் ஆகியோா் நன்றி கூறினா்.