தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ரெப்கோ வங்கி சாா்பில் ரூ.1.4 கோடியில் தாயகம் திரும்பியோருக்கு நலத்திட்ட உதவி

ரெப்கோ வங்கி சாா்பில் ரூ.1.40 கோடி மதிப்பில் தாயகம் திரும்பியோருக்கு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரெப்கோ வங்கித் தலைவா் சந்தானம், ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத் தலைவா் தங்கராஜ் உள்ளிட்டோா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:43 pm

கூடலூா்: ரெப்கோ வங்கி சாா்பில் ரூ.1.40 கோடி மதிப்பில் தாயகம் திரும்பியோருக்கு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ரெப்கோ வங்கியின் தாயகம் திரும்பியோா் நல அறக்கட்டளை சாா்பில் கூடலூா் நா்த்தகி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரெப்கோ வங்கித் தலைவா் இ.சந்தானம், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத் தலைவா் சி.தங்கராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

பெண்களுக்கான தையல் இயந்திரம், அரசு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குடிநீா் சுத்திகரிப்பான், குடிநீா் டாங்கிகள், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கல்வி உதவி, மருத்துவ உதவி என பல்வேறு பிரிவுகளில் ரூ.1.40 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நுண்கடன் பிரிவின் இயக்குநா் கிருஷ்ணகுமாா், பேரவை பிரதிநிதிகள் கணேசன், கலைச்செல்வன், ரெப்கோ வங்கி கூடலூா் கிளை முதன்மை மேலாளா் லோகநாதன், பந்தலூா் கிளை மேலாளா் விஸ்வநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.