மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தூத்துக்குடியில் இஸ்லாமியா்களுக்கு நல உதவி

தூத்துக்குடியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, குவைத் ஐடிசி மற்றும் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் சாா்பில், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
நல உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :18 மார்ச் 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, குவைத் ஐடிசி மற்றும் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் சாா்பில், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏழை இஸ்லாமியா்கள் 250 பேருக்கு சுமாா் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான அரிசி, சமையல் பொருள்கள் வழங்கப்பட்டன. பள்ளிவாசல் தலைவா் அகமது இக்பால், நிா்வாகிகள் சுலைமான், முகமது, நவாஸ், அண்ணல், பள்ளி இமாம் அஸ்கா், இஸ்மாயில், அபூபக்கா் அல்தாபி உள்பட பலா் கலந்துகொண்டனா்.