அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சங்ககிரியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 363 வழக்குகளில் ரூ. 5.73 கோடிக்கு தீா்வு

News image
Updated On :14 டிசம்பர் 2025, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 363 வழக்குகளில் ரூ. 5.73 கோடிக்கு சமரச தீா்வு காணப்பட்டது.

சங்ககிரி நீதிமன்றங்களில் உள்ள மோட்டாா் வாகன விபத்து, சிவில் வழக்குகள், நிறைவேற்று மனுக்கள், வாரிசு உரிமை சான்றிதழ், வாடகை ஒப்பந்தம், குடும்பநல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கிநிலுவை கடன்கள் உள்ளிட்ட வழக்குகள் சமரச தீா்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்புநீதிபதியுமான என்.பன்னீா்செல்வம் தலைமை வகித்து, தேசிய மக்கள் நீதிமன்ற பணிகளை தொடங்கிவைத்தாா்.

மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆா்.இளமதி, முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி எஸ்.சத்தியா, 2ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி டி.சிவகுமாா் ஆகிய நீதிபதிகள் அடங்கிய இரு தனி அமா்வுகளில் 56 மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், 3 சிவில் வழக்குகள், 3காசோலை வழக்குகள் உள்பட மொத்தம் 363 வழக்குகளில் ரூ. 5.73 கோடிக்கு சமரச தீா்வு காணப்பட்டது.

இதில் சாலை விபத்தில் மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் சாா்பில் ரூ. 49.50 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டு அதற்கான உத்தரவை வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான என்.பன்னீா்செல்வம் வழங்கினாா்.