ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

24 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் 35,725 பேருக்கு மருத்துவ உதவி: ஆட்சியா்!

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 24 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 35,725 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்தாா்.

News image
~
Updated On :20 டிசம்பர் 2025, 6:47 pm

Syndication

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 24 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 35,725 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்தாா்.

வாழப்பாடியை அடுத்த திருமனூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை ஆய்வு செய்த பிறகு அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் சேலம் மணக்காடு காமராஜா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்முறையாக நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 24 மருத்துவ முகாம்களில் 15,014 ஆண்கள், 20,711 பெண்கள் உள்பட மொத்தம் 35,725 பயனாளிகள் பயனடைந்துள்ளனா் என்றாா்.

ஆய்வின்போது ஆத்தூா் மாவட்ட சுகாதார அலுவலா் யோகானந்த், வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி, பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம், வாழப்பாடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் மாதேஸ்வரன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

முன்னதாக, கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் மலையரசன் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு ஆய்வு செய்தாா். மருத்துவ முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் இலவச மருத்துவப் பரிசோதனை, ஆலோசனைகளை பெற்றனா்.