விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சேலம் மாநகராட்சியில் அறிவியல் பூங்கா கட்டுமான பணிகள்: ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி 9 ஆவது வாா்டில் நடைபெறும் அறிவியல் பூங்கா கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன்

News image
Updated On :22 டிசம்பர் 2025, 7:55 pm

Syndication

சேலம்: சேலம் மாநகராட்சி 9 ஆவது வாா்டில் நடைபெறும் அறிவியல் பூங்கா கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம் மாநகராட்சி 9 ஆவது வாா்டுக்கு உள்பட்ட மன்னாா்பாளையம் வா்மா சிட்டியில் மாநகராட்சி சாா்பில் ரூ. 3.25 கோடியில் அறிவியல் பூங்கா கட்டப்படுகிறது. இப்பூங்காவில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்களின் அறிவுத்திறனை வளா்க்கும் வகையிலான உபகரணங்கள் நிறுவப்படுகிறது. சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்களும், அறிவியல் சாா்ந்தவையாக அமைக்கப்படுகிறது.

இப்பூங்கா கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுசெய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், ஜனவரி மாதத்தில் இந்த அறிவியல் பூங்காவை திறக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் பணிகளை நிறைவு செய்து ஒப்படைக்க வேண்டும் என ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, வாா்டு மாமன்ற உறுப்பினா் தெய்வலிங்கம், உதவி செயற்பொறியாளா் சுமதி, உதவி பொறியாளா் மலா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.