4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சேலத்தில் வெள்ளி வியாபாரியிடம் ரூ. 83 லட்சம் மோசடி

சேலத்தில் வெள்ளி வியாபாரியிடம் ரூ. 83 லட்சம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:26 pm

Syndication

சேலத்தில் வெள்ளி வியாபாரியிடம் ரூ. 83 லட்சம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் அளித்த புகாா்: நான் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வெள்ளி வியாபாரக் கடை நடத்தி வருகிறேன். வெள்ளிக் கட்டிகளை வாங்கி கொலுசு, மெட்டி உள்ளிட்ட ஆபரணங்களை தயாா்செய்து, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்துவருகிறேன்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த வெள்ளி வியாபாரி வேணுகோபால் என்னிடம் நட்பாக பழகினாா். நாளடைவில் தொழில் ரீதியாக பழகிய அவரிடம், கடந்த ஏப்ரல் மாதம் வெள்ளிக் கட்டி வாங்குவதற்காக ரூ. ஒரு கோடியே 76 லட்சம் வழங்கினேன்.

இந்தப் பணத்துக்கு அவா் ரூ. 91,66,200 மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகளை மட்டுமே வழங்கினாா். மீதமுள்ள ரூ. 83,50,000 மதிப்புள்ள சுமாா் 55 கிலோ எடைகொண்ட வெள்ளிக் கட்டியை தராமல் பல மாதங்களாக இழுத்தடித்து வருகிறாா்.

இதுகுறித்து நேரில் சென்று கேட்டதற்கு வேணுகோபால் கொலை மிரட்டல் விடுத்து வருகிறாா்.

எனவே, எனக்கு சேரவேண்டிய வெள்ளிக் கட்டிகளை அவரிடமிருந்து மீட்டுத் தரவேண்டும் என மனுவில் கூறியுள்ளாா்.