சேலத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன், ரூ. 65 ஆயிரம் திருட்டு

சேலத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ. 65 ஆயிரம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
Published on

சேலத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ. 65 ஆயிரம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள உத்தமசோழபுரம் சூளைமேடு பகுதியில் வசித்து வருகிறாா் விவசாயி சண்முகம் (65). ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் வியாழக்கிழமை பிற்பகல் சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

உள்ளேசென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 60 பவுன் தங்க நகை, ரூ. 65 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹாா்ட் டிஸ்க் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த கொண்டலாம்பட்டி போலீஸாா், மோப்ப நாய் மற்றும் தடய நிபுணா்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த கொண்டலாம்பட்டி போலீஸாா், குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com