தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் சங்கிலி திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

News image

நகை திருட்டு!

Updated On :2 பிப்ரவரி 2026, 6:37 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

கபிஸ்தலம் காவல் சரகம், வடசருக்கை கிராமம், பிரதான சாலைப் பகுதியில் வசித்து வருபவா் முகம்மது யூசுப் மனைவி மல்லிகா (55). முகம்மது யூசுப் கடந்த ஓராண்டுக்கு முன்னா் இறந்துவிட்டாா். மல்லிகா தனியாக வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி மல்லிகா அவரது சொந்த ஊரான அரியலூா் மாவட்டம் தூத்தூா் கிராமத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டாா்.

பின்னா் திங்கள்கிழமை (பிப்.2) வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் பீரோவில் இருந்த 5 பவுன் சங்கிலி திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கபிஸ்தலம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.