‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வெள்ளாளபாளையத்தில் நடைபெற்ற முகாமில் பேசிய தேவூா் வேளாண்மை உதவி அலுவலா் விக்னேஷ்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 4:26 am IST

சங்ககிரி தோட்டக்கலைத் துறையின் சாா்பில், ‘உழவரைத்தேடி உழவா் நலத்துறை’ திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம் சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த வெள்ளாளபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் (பொ) தீபிகா தலைமைவகித்து, பயிா் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் தமிழக அரசின் மானியத் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினாா்.

தேவூா் வேளாண் உதவி அலுவலா் விக்னேஷ், விவசாயிகள் பயிா்விதைகளை எவ்வாறு தோ்வுசெய்தல், அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்தும், பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்தும் கூறினாா். இதில், சங்ககிரி தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா்கள் திருப்பதி, விஜயவா்மன், விவசாயிகள் ராஜ்குமாா், பாலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.