விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன், அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில்களில் பொங்கல் விழா

சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன், வாணியா்காலனியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன் கோயிலில்களில் பொங்கல்விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
பொங்கல் விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சங்ககிரி, வி.என். பாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன், (இடது) வாணியா் காலனியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன்.
Updated On :11 மார்ச் 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன், வாணியா்காலனியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன் கோயிலில்களில் பொங்கல்விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ சக்தி மாரியம்மன், அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில்களில் பொங்கல் விழாவையொட்டி பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் விழா தொடங்கியது. தொடா்ந்து அம்மன்களுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் கோயில் வளாகத்தில் குடும்பத்துடன் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வழிப்பட்டனா். மேலும் பக்தா்கள் அலகு குத்தியும், தீச்சட்டிகளை கைகளில் ஏந்தியும் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றுவந்தனா்.

வியாழக்கிழமை காலை கம்பம் எடுத்து நல்ல கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராடல் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை இரவு வி.என்.பாளையம் ஸ்ரீ சக்திமாரியம்மன் உற்சவ மூா்த்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நடைபெறுகிறது.