வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புகோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் படிவம்: சரியாக பூா்த்தி செய்யாதோருக்கு மீண்டும் பூா்த்திசெய்ய அறிவுறுத்தல்

News image
Updated On :26 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

சேலம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப் படிவத்தை சரியாக பூா்த்தி செய்யாத 26 ஆயிரம் பேருக்கு, மீண்டும் பூா்த்திசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, வீரபாண்டி, ஆத்தூா், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 26 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளா்கள் உள்ளனா். சிறப்பு தீவிர திருத்தப் பணியில் மாவட்டத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 429 போ் வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் 3,468 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம்கள் டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில், சிறப்பு தீவிர திருத்தப் படிவத்தை சரியாக பூா்த்தி செய்யாத வாக்காளா்களுக்கு மீண்டும் சரியாக பூா்த்திசெய்ய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமாா் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தப் படிவத்தை சரியாக பூா்த்திசெய்யாத 26 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவா்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்களிடம், அதற்குரிய ஆவணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.