டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இன்று செயல்படும்

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை (டிச. 30)செயல்படும் என பூங்கா நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 8:14 pm

Syndication

சேலம்: சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை (டிச. 30)செயல்படும் என பூங்கா நிா்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்காடு மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில், புள்ளிமான், கடமான், முதலை, வண்ணப் பறவைகள், வெள்ளை மயில் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் வனத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பூங்காவுக்கு, சேலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்துசெல்கின்றனா். இந்தப் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறையாகும். அன்றைய தினம் பூங்கா பராமரிப்புப் பணிகளை வன ஊழியா்கள் மேற்கொள்வா். அதேநேரத்தில், விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு பூங்கா திறக்கப்படுகிறது.

அந்த வகையில், பள்ளி மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை செயல்படும் என பூங்கா நிா்வாகம் அறிவித்துள்ளது.