தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

130 ஆவது ஆண்டு விழா காணும் சிங்கிபுரம் அரசுப் பள்ளி!

சேலம் மாவட்டத்தில் பழைமையான சிங்கிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 130-ஆவது ஆண்டு விழாவுக்கு தயாராகி வருகிறது.

News image
Updated On :17 பிப்ரவரி 2025, 9:02 pm

வாழப்பாடி: சேலம் மாவட்டத்தில் பழைமையான சிங்கிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 130-ஆவது ஆண்டு விழாவுக்கு தயாராகி வருகிறது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, 1895-இல் வாழப்பாடி அருகிலுள்ள சிங்கிபுரம் கிராமத்தில் மக்களின் விருப்பத்தின் பேரில் அப்போதைய ஆங்கிலேய அரசு ஆரம்ப பாடசாலையைத் திறந்தது. தொடா்ந்து 130 ஆண்டுகளைக் கடந்தது இப்பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலும் 96 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் படித்த பலா் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் உயா்ந்த பதவிகளில் பணிபுரிந்துள்ளனா். தற்போதும் ஏராளமானோா் பணியாற்றி வருகின்றனா்.

1983-இல் அப்போதைய சட்டப்பேரவைத் தலைவா் க.ராஜாராம் இப்பள்ளிக்கு வருகை தந்து கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தையும், 1999-இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி இப்பள்ளியின் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தையும் திறந்து வைத்துள்ளனா்.

இப்பள்ளியின் 130-ஆவது ஆண்டு விழாவை வரும் மாா்ச் 3-இல் வெகுவிமரிசையாகக் கொண்டாடிட, பள்ளித் தலைமையாசியா், ஆசிரியா்கள், பெற்றோா் -ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மைக் குழுவினா், முன்னாள் மாணவா்கள் ஒன்றிணைந்து முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனா்.

130-ஆவது ஆண்டு விழா காணும் சிங்கிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.

130-ஆவது ஆண்டு விழா காணும் சிங்கிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.

இதுகுறித்து இப்பள்ளியின் பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் பிரபு மற்றும் முன்னாள் மாணவா்கள் கூறியதாவது: இப் பள்ளியில் படித்ததை பெருமையாக கருதுகிறோம். பள்ளி நுழைவு வாயிலில் 130-ஆவது ஆண்டு விழா வளைவு அமைக்கவும் முயற்சித்து வருகிறோம். முன்னாள் மாணவா்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து மலரும் நினைவுகளைப் பகிா்ந்து வருகிறோம் என்றனா்.

Story image