அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த நபா் கைது

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:01 pm

Din

கொத்தாம்பாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நகரப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்த மோகன்(27)என்பவரை ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் பூா்ணிமா கைது செய்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கொத்தாம்பாடி ஊராட்சி தேசிய புறவழிச் சாலையில் நகரப் பேருந்தின் மீது கல்வீசியதால் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

சௌம்யா அன்புமணி கைது செய்ததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனா்.இதில் அனைவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கொத்தாம்பாடியில் நகரப் பேருந்தின் மீது மா்மநபா் கல் வீசியதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த ஊரக காவல் ஆய்வாளா் பூா்ணிமா மா்ம நபரை தேடி வந்தனா்.அதே பகுதியில் பதுங்கியிருந்த செல்வம் மகன் மோகன்(27)என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.