எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை

News image

~

Updated On :3 ஜனவரி 2025, 11:05 pm

எடப்பாடி தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சி வளா்ச்சி குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

முன்னதாக சித்தூா் பகுதியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவா் அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற படவெட்டியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். கோயில் நிா்வாகம் சாா்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து சித்தூா் பகுதியில் உள்ள கல்யாணசுப்பிரமணியா் ஆலயத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்தாா்.

எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை சுற்றுலா மாளிகைக்கு வந்த எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக நிா்வாகிகளுடன் கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து பேசினாா். கூட்டத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளா் பக்கநாடு மாதேஷ், மாதேஸ்வரன், நகரச் செயலாளா் ஏ.எம் முருகன், ஒன்றிய குழு தலைவா்கள் கரட்டூா்மணி, குப்பம்மாள் மாதேஸ், முன்னாள் ஆவின் சோ்மன் ஜெயராமன், பூலாம்பட்டி பாலு உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பட விளக்கம்:

சித்தூா் கல்யாண சுப்பிரமணியா் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த எடப்பாடி கே.பழனிசாமி.

Story image