நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேலத்தில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து தேமுதிக சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :6 ஜனவரி 2025, 6:15 pm

Din

சேலம்: பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து தேமுதிக சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம், கோட்டை பகுதியில் மாநகர மாவட்ட தேமுதிக செயலாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளா் அழகாபுரம் மோகன்ராஜ் கண்டனம் தெரிவித்து பேசினாா்.

தொடா்ந்து, பெண்களுக்கும், மாணவிகளுக்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. ஆயிரம் வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத் தொடா்ந்து அழகாபுரம் மோகன்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தொடா்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமையை ஆளும் திமுக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட நபா் திமுக பிரமுகா் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனா். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டு உள்ளது. திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்தாா்.

இதில், செவ்வாய்பேட்டை பகுதி செயலாளா் தக்காளி ஆறுமுகம், மாநகர மாவட்ட அவைத் தலைவா் செல்வகுமாா், மாநகா் மாவட்ட துணைச் செயலாளா் சீனிவாசன், ராஜு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.