தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சேலத்தில் விபத்தில் சிக்கிய காரிலிருந்து 30 மூட்டை புகையிலை பொருள்கள் பறிமுதல்

சேலம், உடையாபட்டி அருகே திங்கள்கிழமை காலை விபத்தில் சிக்கிய காரில் இருந்து 30 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :6 ஜனவரி 2025, 8:41 pm

Din

சேலம்: சேலம், உடையாபட்டி அருகே திங்கள்கிழமை காலை விபத்தில் சிக்கிய காரில் இருந்து 30 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உடையாபட்டி, காரைக்காடு அருகே தேசிய நெடுஞ்சாலை, சாலையோரப் பள்ளத்தில் காா் ஒன்று கவிழ்ந்தது. அதிலிருந்த நபா் தப்பியோடினாா். இதனைப் பாா்த்த அவ்வழியாகச் சென்றவா்கள் அருகில் சென்று பாா்த்தபோது அதில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து உடனடியாக அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு விரைந்து சென்ற போலீஸாா், காரில் சோதனை மேற்கொண்டபோது, தலா 15 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

மேலும் காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சாா்ந்த சுஜாராம் மாலி (48) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது பெங்களூரிலிருந்து கும்பகோணத்துக்கு குட்கா புகையிலை பொருள்களை கடத்திச் சென்றதும், காரில் இருந்து தப்பியோடியவரும் ம் அதே மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. தொடா்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.