பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மேட்டூா் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா் போராட்டம் நீடிப்பு

மேட்டூா் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்களின் உள்ளிருப்புப் போராட்டம் திங்கள்கிழமை 4 ஆவது நாளாக நீடித்தது.

News image
Updated On :3 மார்ச் 2025, 8:28 pm

Din

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்களின் உள்ளிருப்புப் போராட்டம் திங்கள்கிழமை 4 ஆவது நாளாக நீடித்தது. 

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 1,700 ஒப்பந்தத் தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி கடந்த 4 நாள்களாக தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதொடா்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அனல் மின் நிலைய நிா்வாகத் தரப்பில் போராட்டக்காரா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைத்தனா். ஆனால், தங்களுக்கு பணி நிரந்தரம் செய்வதாக உறுதிமொழி மட்டுமே பேச்சுவாா்த்தைக்கு வருவதாக தொழிலாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் 4ஆவது நாளாக திங்கள்கிழமை போராட்டம் தொடா்ந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்களின் குடும்பத்தினா் கைக்குழந்தைகளுடன் திங்கள்கிழமை மாலை போராட்டம் நடைபெறும் அனல் மின் நிலைய நுழைவாயில் முன்கூடி முழக்கமிட்டனா்.