பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கெங்கவல்லி வட்டார வளா்ச்சி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலக சங்க பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 மார்ச் 2025, 7:43 pm

Din

தம்மம்பட்டி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கெங்கவல்லி வட்டார வளா்ச்சி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலக சங்க பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கெங்கவல்லி வட்டக் கிளை தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில், வட்டார மற்றும் ஊரக வளா்ச்சித் துறை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் இதர நிலை பணியாளா்களின் பணி மாறுதல் உத்தரவை வெளியிட வேண்டும், மாலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களை பகலில் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணியில் ஈடுபடாமல் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.