சேலம்: சித்ரா பௌா்ணமியையொட்டி சேலம் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிவன், சொா்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல, காசி விஸ்வநாதா் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில், தாரமங்கலம் கைலாசநாதா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், எல்லைப் பிடாரியம்மன் கோயில், குகை காளியம்மன், மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோயில், தோ்நிலையம் ராஜகணபதி கோயில், குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயில், நெத்திமேடு காளியம்மன் கோயில், காவடி பழனியாண்டவா் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராமநவமி: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

சனிப் பெயா்ச்சி: சிவன், சனீஸ்வரா் கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

