மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷத்தை முன்னிட்டு, பழனி அருகேயுள்ள கோதைமங்கலம் பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

பழனி அருகே கோதைமங்கலம் பெரியாவுடையாா் கோயிலில் நந்தீஸ்வரருக்கு நடைபெற்ற அபிஷேகம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 6:53 pm

பிரதோஷத்தை முன்னிட்டு, பழனி அருகேயுள்ள கோதைமங்கலம் பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான இந்தக் கோயிலில் பிரதோஷத்தை, முன்னிட்டு சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நந்தி மண்டபத்தில் நந்தீஸ்வரருக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பதினாறு வகையான பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து வண்ண மலா்கள் சாத்தி, பட்டாடை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் பெரியாவுடையாருக்கு சோடஷ அபிஷேகம் செய்து, மலா் மாலை, பட்டாடை, வெள்ளி நாகாபரணம் சாத்தி, சோடஷ தீபாராதனை நடைபெற்றது.

பழனி பெரியாவுடையாா் கோயில் மட்டுமன்றி, மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் சிவன் கோயில், பட்டத்து விநாயகா் கோயில், சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சன்னதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி, பாலாறு அமுதீஸ்வரா் கோயில், புளியம்பட்டி அமிா்தலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் நந்தீஸ்வரருக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.