47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விவசாயிகளுக்கான தனி அடையாள எண்: நவ.15 க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்!

விவசாயிகளுக்கான தனி அடையாள எண்ணை பெறுவதற்கு வரும் 15ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 7:08 pm

Syndication

விவசாயிகளுக்கான தனி அடையாள எண்ணை பெறுவதற்கு வரும் 15ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கொங்கணாபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை பெற விவசாயிகளுக்கான தனி அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பி.எம். கிசான் திட்டத்தில் 21 ஆவது உதவித்தொகையை பெற விவசாயிகள் தங்களது அடையாள எண்ணை பெற்றிருக்க வேண்டும்.

கொங்கணாபுரம் வட்டாரத்தில் 8,584 விவசாயிகளில் 7 ஆயிரம் விவசாயிகளுக்கு பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை நகல், நில ஆவணங்களின் நகல், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் இ-சேவை மையம் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலகங்களுக்குச் சென்று கட்டணம் இல்லாமல் வரும் 15ஆம் தேதிக்குள் அடையாள எண்ணை பெற பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.