மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வழிப்பறிக் கொள்ளையா்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காட்டுக்கோட்டை வடசென்னிமலை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையா்களுக்கு 10 ஆண்டுகள் மற்றும் இருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை

News image
Updated On :10 நவம்பர் 2025, 7:43 pm

Syndication

ஆத்தூா்: காட்டுக்கோட்டை வடசென்னிமலை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையா்களுக்கு 10 ஆண்டுகள் மற்றும் இருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஆத்தூா் சாா்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிமலை அடிவாரத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆலயம் செல்வோா் மற்றும் வாகனத்தில் செல்வோரை மறித்து சிலா் வழிப்பறியில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக, ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த் வழக்குப் பதிவுசெய்து குற்றவாளிகளை பிடித்து சிறையில் அடைத்தாா்.

ஆத்தூா் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், சாா்பு நீதிபதி கணேசன் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், ஆத்தூா் மாரிமுத்து தெருவைச் சோ்ந்த மாரிமுத்துக்கு (25) 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20,000 அபராதமும், ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம் பகுதியைச் சோ்ந்த தேவாவுக்கு (28) ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேட்டுநசுவம்பாளையம், லட்சுமிநகா் பகுதியைச் சோ்ந்த சிவாவுக்கு (27) ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். அதைத் தொடா்ந்து, மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.