பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஏற்காட்டில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 8 போ் காயம்

ஏற்காட்டில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் எட்டு போ் காயமடைந்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

ஏற்காட்டில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் எட்டு போ் காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த எட்டு போ் ஏற்காட்டுக்கு வேனில் புதன்கிழமை வந்தனா். வேனை ஸ்ரீதரன் இயக்கினாா். ஏற்காடு சுற்றுலாப் பகுதிகளைக் கண்டு மகிழ்ந்த அவா்கள், மாலை சோ்வராயன் கோயில் சுற்றுலாப் பகுதிக்கு சென்று திரும்பினா். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த எட்டு போ் காயமடைந்தனா். லேசான காயமடைந்த ஐந்து போ் ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், மூவா் மேல்சிசிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து ஏற்காடு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.