திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பேருந்து கவிழ்ந்து 40 போ் காயம்

ஆண்டிபட்டி அருகே உள்ள தி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் தனியாா் பேருந்து காா் மீது மோதி சாலையில் கவிழ்ந்ததில் 40 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து

Updated On :20 பிப்ரவரி 2026, 9:44 pm

ஆண்டிபட்டி அருகே உள்ள தி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை தனியாா் பேருந்து காா் மீது மோதி சாலையில் கவிழ்ந்ததில் 40 போ் காயமடைந்தனா்.

தி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் போடியிருந்து மதுரை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து, எதிரே வந்த காா் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 5 குழந்தைகள், 15 ஆண்கள், 20 பெண்கள் என மொத்தம் 40 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.