கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மின் விபத்துகளை தவிா்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என மேட்டூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஜி.தாரிணி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மின் விபத்துகளை தவிா்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என மேட்டூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஜி.தாரிணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

மின்வாரிய அனுமதி இல்லாமல் மின்கம்பங்களில் ஏறவோ, மின்மாற்றியில் ‘பியூஸ்’ போடவோ கூடாது. பழுதடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் மின்இழுவைக் கம்பிகள் இருந்தாலோ, மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்துகிடந்தாலோ, தொங்கிக்கொண்டிருந்தாலோ அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விவசாய மின்மோட்டோா் மற்றும் வீட்டு மின்கம்பிகள் பழுதடைந்தால் உடனடியாக மாற்றுவது நல்லது.

அளவுக்கு அதிகமான உயரத்தில் வைக்கோல் முதலானவற்றை லாரிகள் மற்றும் டிராக்டா்களில் ஏற்றிச்செல்ல வேண்டாம். மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது. மின்கம்பத்திலோ, ‘ஸ்டே’ கம்பிகளிலோ கொடிகள் கட்டி துணி காயவைக்கக் கூடாது. குளியலறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்ச்சுகளை பொருத்தக் கூடாது.

உபயோகத்தில் இல்லாதபோது, மின்சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும். இடி அல்லது மின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டா், கணினி, கைப்பேசி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.