மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை

தம்மம்பட்டியில் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:35 pm

Syndication

தம்மம்பட்டியில் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.

தம்மம்பட்டி கோட்டை முனியப்பன் கோயில் அருகே வசித்து வந்தவா் ராஜா (53). கூலித் தொழிலாளியான இவா் தம்மம்பட்டி அருகே சோபனபுரத்திலுள்ள தனது தாயாரைக் காண அண்மையில் இருசக்கர வாகனத்தில் சென்றாா். கொப்பம்பட்டி கல்லாங்குத்து பகுதியில் சென்றபோது, சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானாா்.

திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 12-ஆம் தேதி இரவு மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை ராஜா விருப்பத்தின்பேரில் அவரது குடும்பத்தினா் தானம் செய்தனா். அதைத் தொடா்ந்து, அவரது உடல் வியாழக்கிழமை நள்ளிரவு தம்மம்பட்டிக்கு கொண்டுவரப்பட்டது.

தமிழக அரசு உத்தரவுப்படி, உடல் உறுப்புகளை தானம் செய்வோரது உடலுக்கு அரசு மரியாதை செய்யும்பொருட்டு, ஆத்தூா் கோட்டாட்சியா் தமிழ்மணி தலைமையில், கெங்கவல்லி வட்டாட்சியா் நாகலட்சுமி, வருவாய் ஆய்வாளா் கலைச்செல்வி உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.