தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

News image
Updated On :16 நவம்பர் 2025, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன் ஏற்பாட்டில் திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 30 பேரும், எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளா் பக்கநாடு மாதேஸ் ஏற்பாட்டில் இருப்பாளி ஊராட்சி, செவடனூா் திமுக கிளை செயலாளா் ராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்டோரும் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியின்போது பவானி வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேல், பவானி வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளா் குப்புசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

இதேபோல திருச்சி மாநகா் மாவட்டச் செயலாளா் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களான திருச்சி மாவட்ட அவைத் தலைவா் ஆா்.ராஜ்குமாா், திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஏ.பால்ராஜ் ஆகியோரும் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.