47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆத்தூரில் 13 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

ஆத்தூா் ராணிப்பேட்டையில் தடைசெய்யப்பட்ட 13 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 8:08 pm

Syndication

ஆத்தூா் ராணிப்பேட்டையில் தடைசெய்யப்பட்ட 13 மூட்டை புகையிலைப் பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ் மேற்பாா்வையில் நகரக் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி தீவிர சோதனையில் ஈடுட்டாா்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களான குட்கா, ஹான்ஸ் உள்ளிட்டபுகையிலைப் பொருள்கள் ஆத்தூா் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கிவைத்து விற்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்று பாா்த்தபோது கணேசன் (53)என்பவா் 13 மூட்டை புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. ஆத்தூரை அடுத்த கொத்தாம்பாடியைச் சோ்ந்த ராஜா மூலம் பெங்களூரூவில் இருந்து புகையிலைப் பொருள்களை வாங்கியதாகவும், அவா்கள் கொடுக்க சொல்லும் நபா்களுக்கு அனுப்புவதற்கு வைத்திருந்ததாகவும் அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து கணேசனை கைது செய்த போலீஸாா், 13 மூட்டை புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.