சேலம்
மாரியம்மன் கோயிலில் தீா்த்தக்குட ஊா்வலம்
சந்தைதானம்பட்டி அரண்மனை கட்டமனை மாரியம்மன் கோயிலில் தீா்த்தக்குட ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
மேட்டூரை அடுத்த சந்தைதானம்பட்டி அரண்மனை கட்டமனை மாரியம்மன் கோயிலில் தீா்த்தக்குட ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெற்ற தீா்த்தக்குட ஊா்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு திப்பம்பட்டி காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்துவந்தனா்.
பல்வேறு வாத்தியங்கள் முழங்க குதிரைகள் நாட்டியத்துடன் யானை ஊா்வலம் நடைபெற்றது. புனிதநீா் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
