பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் பெண்கள் உடைமாற்றும் அறை, குளிக்கும் அறை மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வறை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பூலாம்பட்டிக்கு புதன்கிழமை வந்த மாவட்ட பேரூராட்சிகள் துணை இயக்குநா் குருராஜன், இங்கு நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.
மேலும், பூலாம்பட்டி பேரூராட்சிக்கு ரூ. 1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய அலுவலக கட்டடத்தையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவா் அழகுதுரை, துணைத் தலைவா் முரளி, செயல் அலுவலா் அசோக்குமாா், ரஹீம்கான் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தோ்தல் கட்டுப்பாட்டு அறை, தோ்தல் வாக்காளா் உதவி மையத்தில் ஆய்வு

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

மாம்பாக்கத்தில் தீயணைப்பு நிலையத்துக்கான இடம்: இயக்குநா் சீமா அகா்வால் ஆய்வு

பறக்கும் படையினரின் பணிகள் ஆய்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


