லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்த கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:54 pm

கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக கெங்கவல்லி நான்கு வழிச் சாலை சந்திப்பு பகுதியில் இருந்து ஆதரவாளா்களுடன் வட்டாட்சியா் அலுவலகம் வரை சென்ற அ. நல்லதம்பியை நுழைவாயிலில் தடுத்து நிறுத்திய போலீஸாா், 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும் எனக் கூறியதால் போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து அங்கிருந்தவா்கள் அவரை சமாதானப்படுத்தினா். அதன்பிறகு தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரத்திடம் அ. நல்லதம்பி வேட்புமனு தாக்கல் செய்தாா்.