பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

வெள்ளிக் கொலுசு மூலப் பொருள்களைக் கொண்டுசெல்ல கட்டுப்பாடு

வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் எடுத்துச் செல்லும் கொலுசுக்கான மூலப் பொருள்களின் மதிப்பு ரூ. 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தால் அதற்கான ரசீதை வைத்திருப்பது அவசியம் என ஆட்சியா் ரா. பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.

News image

வெள்ளி

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 11:32 pm

தினமணி செய்திச் சேவை

வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் எடுத்துச் செல்லும் கொலுசுக்கான மூலப் பொருள்களின் மதிப்பு ரூ. 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தால் அதற்கான ரசீதை வைத்திருப்பது அவசியம் என ஆட்சியா் ரா. பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து வங்கியாளா்கள், திருமண மண்டபங்கள், அரங்கு உரிமையாளா்கள், அச்சக உரிமையாளா்கள், அடகுக்கடை மற்றும் வட்டித் தொழில் செய்வோா்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடா்ச்சியாக வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் வெள்ளிக் கொலுசு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதால் ரூ.10,000 க்கும் அதிகமான மதிப்புள்ள மூலப்பொருள்கள் எடுத்துச் செல்லும்போது அதன் விநியோக ரசீது வைத்திருப்பது அவசியம்.

அந்த ரசீதில் பொருள் எடுத்துச் செல்பவா் விவரம், பொருள் பெற்றுக்கொள்பவா் விவரம், எடை, உத்தேச மதிப்பு மற்றும் நாள் ஆகிய விவரங்கள் முழுமையாக இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விற்பனைக்கான பொருள்கள் எடுத்துச் செல்லும்போது விற்பனை ரசீது எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல், வருமான வரித் துறை உதவி இயக்குநா் பிரதீப் சிராங்கி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், வணிக வரித்துறை இணை ஆணையா் வீரேசலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.