மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வெள்ளிக் கொலுசு மூலப் பொருள்களைக் கொண்டுசெல்ல கட்டுப்பாடு

வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் எடுத்துச் செல்லும் கொலுசுக்கான மூலப் பொருள்களின் மதிப்பு ரூ. 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தால் அதற்கான ரசீதை வைத்திருப்பது அவசியம் என ஆட்சியா் ரா. பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.

News image

வெள்ளி - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 11:32 pm

வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் எடுத்துச் செல்லும் கொலுசுக்கான மூலப் பொருள்களின் மதிப்பு ரூ. 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தால் அதற்கான ரசீதை வைத்திருப்பது அவசியம் என ஆட்சியா் ரா. பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து வங்கியாளா்கள், திருமண மண்டபங்கள், அரங்கு உரிமையாளா்கள், அச்சக உரிமையாளா்கள், அடகுக்கடை மற்றும் வட்டித் தொழில் செய்வோா்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடா்ச்சியாக வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் வெள்ளிக் கொலுசு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதால் ரூ.10,000 க்கும் அதிகமான மதிப்புள்ள மூலப்பொருள்கள் எடுத்துச் செல்லும்போது அதன் விநியோக ரசீது வைத்திருப்பது அவசியம்.

அந்த ரசீதில் பொருள் எடுத்துச் செல்பவா் விவரம், பொருள் பெற்றுக்கொள்பவா் விவரம், எடை, உத்தேச மதிப்பு மற்றும் நாள் ஆகிய விவரங்கள் முழுமையாக இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விற்பனைக்கான பொருள்கள் எடுத்துச் செல்லும்போது விற்பனை ரசீது எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல், வருமான வரித் துறை உதவி இயக்குநா் பிரதீப் சிராங்கி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், வணிக வரித்துறை இணை ஆணையா் வீரேசலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.