அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

சேலத்தில் 3 கிலோ வெள்ளிக் கொலுசு பறிமுதல்

சேலம் செவ்வாய்பேட்டையில் வியாபாரி எடுத்துச் சென்ற 3 கிலோ வெள்ளி கொலுசை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 11:58 pm

சேலம் செவ்வாய்பேட்டையில் வியாபாரி எடுத்துச் சென்ற 3 கிலோ வெள்ளி கொலுசை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் முன் தோ்தல் பறக்கும் படை அதிகாரி தேவகுமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த சேலம், குகை மாா்கெட் தெருவை சோ்ந்த வெள்ளி வியாபாரி ரவியை நிறுத்தி சோதனை நடத்தினா்.

அதில் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 4.80 லட்சம் மதிப்பிலான 3 கிலோ 300 கிராம் எடை கொண்ட வெள்ளிக் கொலுசுகளை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.