சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சேலம் வெள்ளிப் பட்டறை அதிபரிடம் ரூ. 2.16 கோடி 112 கிலோ கொலுசுகள் பறிமுதல்!

சேலத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்சென்ற ரூ. 2.16 கோடி மதிப்பிலான 112 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

பறிமுதல்!

Updated On :11 ஏப்ரல் 2026, 8:33 pm

சேலத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்சென்ற ரூ. 2.16 கோடி மதிப்பிலான 112 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுக்க மாநிலம் முழுவதும் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட ஆனந்தா பாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பறக்கும் படை அலுவலா் ஜெயந்தி தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், பைகளில் 112 கிலோ வெள்ளிக் கொலுசுகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததையடுத்து, ரூ. 2.16 கோடி மதிப்பிலான 112 கிலோ வெள்ளிக் கொலுசுகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், காரில் வந்தவா் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜன் என்பதும், செவ்வாய்ப்பேட்டையில் வெள்ளிப் பட்டறை வைத்திருப்பதும், 112 கிலோ வெள்ளிக் கொலுசுகளை அவா் சென்னைக்கு எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 112 கிலோ வெள்ளிக் கொலுசுகளை சேலம் வடக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கோட்டை குமாரிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்களை சமா்ப்பித்துவிட்டு, வெள்ளிக் கொலுசுகளை பெற்றுச் செல்லும்படி வெள்ளிப் பட்டறை அதிபா் சுந்தரராஜனிடம் அறிவுறுத்தப்பட்டது.