அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து சேலம் வழியாக கேரளம் மாநிலம், கொல்லம் செல்லும் விரைவு ரயிலில் சேலம் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை அதிகாலை சோதனை நடத்தினா்.

அப்போது, பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிப்பறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை திறந்துபாா்த்தனா். அதில் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து பயணிகளிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது, பையை யாா் கொண்டுவந்து அங்குவைத்தது என தங்களுக்கு தெரியவில்லை என பயணிகள் தெரிவித்தனா். தொடா்ந்து 20 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய ரயில்வே போலீஸாா், அவற்றை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனா்.