திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

News image

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் (கோப்புப்படம்)

Updated On :6 ஏப்ரல் 2026, 2:07 am IST

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொங்கு மண்டல வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் தவாக வேட்பாளா்களை அக்கட்சித் தலைவா் தி. வேல்முருகன் அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவாக தலைமையிலான கூட்டணி ஜாதிய கூட்டணி அல்ல; சமூக நீதிக்கான கூட்டணி. தருமபுரியில் பாமக சாா்பில் போட்டியிடும் சௌமியா கேட்டுக் கொண்டால் நாங்கள் வேட்பாளரை நிறுத்தமாட்டோம். பிற கட்சிகளின் தலைமை எங்கெல்லாம் கேட்கிறதோ அங்கு தவாக தலைமையிலான கூட்டணி போட்டியிடாது. புதிய அரசியலை முன்னெடுக்க பாடுபடுவோம்.

குறிப்பாக, சென்னை திருவிக நகரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, காட்டுமன்னாா்கோவிலில் திருமாவளவன், ஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழக தலைவா் கிருஷ்ணசாமி, காரைக்குடியில் சீமான் ஆகியோா் போட்டியிடும் தொகுதிகளில் தவாக வேட்பாளா்களை நிறுத்தவில்லை.

பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் சுரேந்தா் நிறுத்தப்பட்டுள்ளாா். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாக தருவோம். கட்டணமில்லா தரமான மருத்துவ வசதியை உறுதிசெய்வோம். மத்திய அரசு பதவிகளில் 90 சதவீதம் அந்தந்த மாநில மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்வோம் என்றாா்.