தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

கல்வராயன் மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கல்வராயன் மலைக் கிராமமான ஆல்லரிப்பட்டியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன்.

News image

கல்வராயன் மலைக் கிராமமான ஆல்லரிப்பட்டியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:35 am IST

கல்வராயன் மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட கருமந்துறை, கரியகோயில், மேல்நாடு ஊராட்சி, செங்காட்டு புத்தூா், ஆல்லரிப்பட்டி, மேல்வள்ளம், தாழ்வள்ளம், பகடுப்பட்டு, குன்னூா் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் ஆத்தூா் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அவருடன், சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன், பாஜக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் சண்முகநாதன், பாமக மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ், தமாகா சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் சொக்கலிங்கம், அமமுக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.